
வாஸ்து சொல்லும் கதவு பலன்கள்
வாஸ்து சாஸ்திரம் என்பது வீடு அமைந்திருக்கும் இடத்தையோ, திசையையோ மட்டும் பொறுத்தது இல்லை. அந்த வீட்டில் அமைக்கப்படும் கதவுகளின் எண்ணிக்கையைக் கூடப் பொறுத்து அமையும் என்கின்றன வாஸ்து சாஸ்திர நூல்கள்.
கதவுகளின் எண்ணிக்கையையும், வாஸ்து கூறும் சாஸ்திரத்தையும் பார்ப்போம்.
2 கதவுகள் - நல்ல பலன்கள் ஏற்படும்.
3 கதவுகள் - புதுப் புது எதிரிகள் உருவாவார்கள்.
4 கதவுகள் - ஆயுள் நீடிக்கும்.
5 கதவுகள் - உடல் நலக்குறைவு ஏற்படும்.
6 கதவுகள் - குழந்தை பாக்கியம் அமையும்.
7 கதவுகள் - ஆபத்துகள் தேடிவரும்.
8 கதவுகள் - செல்வம் கொழிக்கும்.
9 கதவுகள் - நோய் நொடிகளால் தொல்லை.
10 கதவுகள் - திருட்டுகள் அதிகரிக்கும்.
ஜன்னலுக்கு போடப்பட்டிருக்கும் கதவுகள் எல்லாம் இந்த லிஸ்டில் வராது.
வீடு கட்டக் கூடாது எங்கே...?
வுரநளனயல, 18 னுநஉநஅடிநச 2007
ஒரு வீடு கட்டப் போகிறீர்கள் என்றால், அதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கிய விதிகள் உள்ளன. இவைகளைத் தாண்டி செய்யக் கூடாதவை என்றும் சில விஷயங்கள் உள்ளன. முதலில் அதைத் தெரிந்து கொள்வோம்.
அடிப்படையில், எந்தெந்த இடங்களில் வீடு கட்டக் கூடாது என்பதை தெரிந்து கொண்டாலே, சிறப்பானதாக இருக்கும்.
ழூ கோயில் நிலங்களில் வீடு கட்டுவது நல்லதல்ல.
ழூ சுடுகாடு மற்றும் இடுகாடு நிலங்களில் வீடு கட்டினால் வேண்டாத கேடு வந்து சேரும்.
ழூ நீர் ஓடி வருகின்ற நிலங்களிலும், மிகவும் பள்ளமாக உள்ள நிலங்களில் வீடு கட்டுவதைத் தவிர்க்க வேண்டும்
ழூ கூம்பு, முக்கோணம், விசிறி, உடுக்கை ஆகிய உருவங்களைக் கொண்ட பகுதிகளில் வீடு கட்டுதல் கூடாது.
ழூ வீடு கட்டப்போகும் நிலம் வடக்கு கிழக்கு உயர்ந்தும், மேற்கும் தெற்கும் தாழ்ந்தும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.



